சேலம்.! பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தொழிலாளியை தாக்கிய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது(57). இவரும், இவருடைய நண்பருமான விஜயகுமார்(34) ஆகிய இருவரும் மூட்டை தூக்கும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.

இதில் விஜயகுமாரிடம், மாது அடிக்கடி செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மறுபடியும் மாது தன் வீட்டு செலவிற்காக விஜயகுமாரிடம் 300 ரூபாய் கேட்டுள்ளார்.

இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாது சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து மாது இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youth who assaulted the worker was arrested in salem


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->