தேனி நர்சிங் கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை! 4 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமை! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவியை, நான்கு பேர் சேர்ந்த கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. 

பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மாணவியை அந்த நான்கு பேர் சேர்ந்த கும்பல் இறக்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து மாணவி கடுமையான வலியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் உடனடியாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு வலுப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் மாணவிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரின் பேரில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவியை கூட்டுப் பாலில் வன்கொடுமை செய்த நான்கு பேர் கும்பலையும், அந்த காரையும் அடையாளம் காண போலீசார் தீவிர தேடுதல் வேட்டைகள் இறங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Theni College Girl Abuse Admitted in ICU


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->