#தென்காசி || கள்ளகாதல் விவகாரத்தில்., எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


தென்காசி அருகே கள்ளக்காதலால் பிறந்த குழந்தை கொன்று புதைக்கப்பட்ட வழக்கில், தற்போது அந்த குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவருக்கு சசிகுமார் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த 2012ஆம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. அதனை முத்துமாரி குளத்தில் வீசி படுகொலை செய்துள்ளார். மேலும், அந்த வழக்கில் முத்துமாரி தேடப்பட்டு வந்த நிலையில், 2019 பிறந்த ஆண் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரில் கைது செய்யப்பட்ட முத்துமாரி, சசி குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த நிலையில், குழந்தையின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட இருவரும் குழந்தை புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

அங்கு காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டது. அதனை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thenkasi nochikolam illegal affair case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->