தூத்துக்குடி மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. உறவினரே கொலை செய்தது அம்பலம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் சொத்து பிரச்சனையில், மூதாட்டியை  கொலை செய்த வழக்கில் அவது உறவினரை போலீசார் கைது செய்தனர். பின்னர்  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய அவரை சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி 1-ம் கேட் முகமதுசாதலிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது  மனைவி செல்லம்மாள் (82). இவர் சில தினங்களுக்கு முன் மாலை தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாளின் உறவினர் பொன்ராஜ் (42) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செல்லம்மாளை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொன்ராஜ், தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பகுதியை செல்லம்மாள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாகவும், அதனை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தனியாக இருந்த செல்லம்மாளை தலையணையால் அழுத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து பொன்ராஜை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi Elderly Woman Murder Case Takes A Sudden Turn Murder of a relative exposed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->