நடனமாட சென்று விபச்சாரத்தில் சிக்கிய தமிழக பெண்கள் - இளம்பெண்ணின் புகாரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள இளம்பெண்களிடம் வெளிநாடுகளில் உள்ள ஓட்டல்களில் நடனமாடினால் கைநிறைய லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி, அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்று விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் இதுபோன்ற கொடுமையில் சிக்கி தமிழகத்திற்கு தப்பி வந்த இளம்பெண் ஒருவர் இந்த சம்பவம் தோஇடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "ஒரு குறிப்பிட்ட விபசார கும்பல் இதுபோன்ற கொடுமையான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த கும்பல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த இளம்பெண் தனது புகாரில் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்தப் புகாரின் படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதற்காக கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி குறிப்பிட்ட விபசார புரோக்கர் கும்பலை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். 

இவர்கள் ஏராளமான இளம்பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி விபசாரத்தில் தள்ளியது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் 4 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

three peoples arrested for prostituetion case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->