கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும்!
TN College Reopen date announce
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-2026ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 25 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்றும், விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்த அதன் செய்திக்குறிப்பில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது.
25,04,2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது,
எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN College Reopen date announce