மாணவா்களுக்கு ரூ.1000 - ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்! - Seithipunal
Seithipunal


மாணவா்களுக்கு ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட உள்ள ‘தமிழ் புதல்வன்’ திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து ஆண் மாணவர்களுக்கும் நிதி அமைப்புகளை வழங்குவதற்காக, தமிழ்நாடு மாநில அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தியது. 

தமிழ்நாடு மாநிலத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் நபர்கள் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள். 

இத்திட்டத்தின் உதவியால், மாணவர்கள் தங்கள் அன்றாடச் செலவுகளுக்கு யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. மொத்தம் 3 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள். தமிழகத்தில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காவே இந்தத் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
 
தகுதி :

* விண்ணப்பதாரர் தமிழக குடிமகனாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

* ஆதார் அட்டை
* மின்னஞ்சல் முகவரி
* கைபேசி எண்
* மின் ரசீது
* முகவரி ஆதாரம்
* பான் கார்டு
* பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Govt TamilPudhalvan Aadhar


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->