நடிகர்கள் கட்டிய பங்களாக்களுக்கு அனுமதி இல்லை.!! தமிழக அரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர். அவர்கள் அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தழிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது "நீதிமன்றம் கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது.

கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt response in actors prakashraj bobbyshimha banglow case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->