இன்று காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டு திருவிழா நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3ம் தேதி) தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தேர் திருவிழாவை முன்னமுன்னிட்டு இன்று (ஏப்ரல் 3ஆம் தேதி) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என்றும் அம்மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Karaikal district local holiday


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->