விநாயகர் சிலை ஊர்வலத்தில் சோகம் : தேனியில் 3 சிறுவர்கள் பலி!....என்ன நடந்தது? - Seithipunal
Seithipunal


தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா விழாவின்போது, விநாயகர் சிலையை டிராக்டரில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 

 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tragedy in vinayagar statue procession 3 children killed in theni what happend


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->