யூடியூபர் வாசன் ஜாமீன் மனு! அதிரடி காட்டிய நீதிபதி!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அடுத்துள்ள தாமல் பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூட்யூபர் டி.டி.எப் வாசன் கடந்த 17ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று சாகசம் செய்ய முயன்றார். 

அப்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவர் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கடந்த 21ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவருக்கு ஜாமீன் மனு வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். தனக்கு ஜாமீன் மனு வழங்க வேண்டும் என யூட்யூபர் வாசன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் அவரது ஜாமின் மனுவை நீதிபதி இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttf vasan bail petition 2nd time dismissed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->