இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து; தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!
Two express trains cancelled Southern Railway announcement
எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணியளவில் தாம்பரம் செல்லும் (வண்டி எண்: 06012) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 13, 20, 27, மே 04, 11, 18, 25, ஜூன் 01, 08, 15, 22,29 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் நாகர்கோவில் செல்லும் (வண்டி எண்: 06011) எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 14, 21, 28, மே 05, 12, 19, 26, ஜூன் 02, 09, 16,23, 30 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
English Summary
Two express trains cancelled Southern Railway announcement