காரைக்குடி || ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு - தலை தெறிக்க ஓடிய பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணாநகர் சேர்ந்தவர் திருக்குமார் இவர் நேற்று கழனிவாச சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக காரில் வந்த இரண்டு பேர் சாலை வளைவில் திரும்பும் போது திருக்குமார் மீது மோதியுள்ளனர்.

இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காரில் வந்தவர்கள் திருக்குமாரை மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருக்குமார் அவரது அண்ணன் திருமூர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி அப்பகுதிக்கு விரைந்து வந்த திருமூர்த்தி உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் சாப்பிட்டுக் கொண்டிருந்த காரில் வந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டுள்ளார்.

அந்த நேரத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் அதிகமானதால் ஆத்திரமடைந்த இருவர்களில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்து திருமூர்த்தியை மிரட்டி பின்னர் தரையை நோக்கி சுட்டுள்ளார்.

இதைபார்த்து பயந்து போன அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஷாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து காரில் வந்த இரண்டு நபரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for attack man in sivakangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->