காதலிக்கு நண்பருடன் சேர்ந்து பாலியல் தொல்லை அளித்த வாலிபர் - தஞ்சாவூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரவிந்த், நான் உன்னை மட்டும் தான் காதலிப்பதாகவும், உன்னை மட்டும் திருமணம் செய்து கொள்வதக்கவும் கூறி, சிறுமியை நம்ப வைத்துள்ளார். 

இந்த நிலையில், அரவிந்த் சிறுமியை சவுக்குத் தோப்புக்குள் அழைத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருடன் சேர்ந்து அரவிந்தின் நண்பரான 20 வயது சரண் என்பவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த சிறுமியை மீட்டனர். இதற்கிடையே இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் படி வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சரண், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். 

அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for harassment in thanjavur


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->