கிருஷ்ணகிரி || மாணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் கொலை செய்த பெண் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி || மாணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலன் கொலை செய்த பெண் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிகை பகுதியை அடுத்த கொலதாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. அலேநத்தம் அங்கன்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

இதையடுத்து ஜோதிக்கு மகாதேவபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடேஷ், என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ஜோதி பிறருடன் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த வெங்கடேஷ், மதுபோதையில் ஜோதியுடன் தகராறு செய்தார். இதனை, ஜோதி தன் அக்கா மகனான ஹரிஷ்குமார், என்பவரிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், வெங்கடேசுக்கும், ஹரிஷ்குமாருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரிஷ்குமார் கல்லால் வெங்கடேஷ் தலையில் தாக்கினார். இதனால், படுகாயமடைந்த வெங்கடேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜோதி மற்றும் ஹரிஷ்குமாரை நேற்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for kill man in krishnakiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->