கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - இருவர் கைது.!  - Seithipunal
Seithipunal


கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி - இருவர் கைது.! 

சென்னையில் உள்ள மாதவரத்தில் மில்க் காலனி மூலச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அம்பத்தூர் பச்சையப்பன் மெயின் ரோட்டை சேர்ந்த சத்ய நாராயணன் என்பவர் முத்துசாமியிடம் உங்கள் மகள்களுக்கு கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதனை உண்மை என்று நம்பிய முத்துச்சாமி சத்யநாராயணனிடம் ரூ.33 லட்சம் வரை கொடுத்தார். ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் சத்யராணாயணன் தலைமறைவாகி விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துச்சாமி சம்பவம் குறித்த போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் சத்யநாராயணன், முத்துசாமியின் மகள்கள் உள்பட 9 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.74 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக சத்ய நாராயணனின் மனைவி ஷாலினி மற்றும் தாமஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for money fraud in chennai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->