தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. 

குறிப்பாக விழுப்புரத்தில் 51 சென்டிமீட்டர் மழையும்,புதுச்சேரியில் 49 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளை கடாக மாறியது. 

இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூர், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதேபோல் நாளை புதுச்சேரியில் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore Cuddalore Villupuram Puducherry school college leave


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->