வேலூர்: அரசு பள்ளி மாணவனுக்கு சரமாரியாக பிளேடு வெட்டு!  - Seithipunal
Seithipunal


வேலூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே இரு மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், மாணவனை, சக மாணவன் பிளேடால் வெட்டி உள்ளார். காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மாணவனுக்கு தலை மற்றும் கை, வயிறு பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, மொத்தம் 16 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவர்களும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பதும், இருவருக்கும் இடையே முன்பகை இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அதிகமாக நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது திருச்சியை தொடர்ந்து வேலூரிலும் மாணவர்கள் தாக்கி கொள்ளும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்க வகுப்புகளை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore School Students Attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->