வேங்கைவயல் விவகாரம் | டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்த நபரின் வழக்கில், உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரத்தில், தங்களை கட்டாயப்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பரபரப்பு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களை கடந்த நிலையில், குற்றவாளிகள் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாமல் இருப்பது மர்மமாகவே உள்ளது.

ஆரம்பம் முதல் தற்போது வரை இந்த சம்பவம் சாதி ரீதியான தீண்டாமையின் உச்சம் என்று குற்றம் சாட்டும் அரசியல் கட்சிகள், சமூக போராளிகள் கூட, இந்த வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய போதிய அழுத்தம் கொடுத்ததாக இதுவரை தெரியவில்லை. 

இன்னும் சொல்லப்போனால் போலீசார் பொறுமையாகவே குற்றவாளியை கண்டுபிடிக்கலாம். ஒன்றும் அவசரம் இல்லை என்ற நிலைக்கு ஒரு அரசியல் கட்சி கருத்து தெரிவிக்கிறது.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கழித்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸ் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, சுமார் 11க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொண்டனர். இந்த டிஎன்ஏ பரிசோதனைக்கு ஒரு தரப்பினர், அதாவது குற்றத்தை சுமத்திய தரப்பினர் தொடர்ந்து டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,வேங்கைவயலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அவரின் அந்த மனுவில், சிபிசிஐடி டிஎஸ்பி தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், தன்னை டிஎன்ஏ பரிசோதனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் அவரின் அந்த மனுவில் விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், "வேங்கைவயல் வழக்கில் யார் யாருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விசாரணை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்க வேண்டும். அதன் பின்னரே டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 

சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் பெற்று, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று நீதிபதிய இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vengaivayal vase DNA Test Issue chennai HC Order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->