#கடலூர் || பள்ளி ஆசிரியையை கத்தியால் தாக்கிய மாணவனை வலைவீசி தேடும் போலீஸ்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் அருகே பள்ளி ஆசிரியையை கத்தியால் தாக்கிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணக்குமார். இவரின் மனைவி ரேகா விருத்தாச்சலம் - கடலூர் சாலையில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இன்று மதிய உணவிற்காக தனது வீட்டிற்கு சென்றுவிட்டு வரும் வழியில், அவரை 18 வயது தக்க பள்ளி மாணவன் ஒருவன் வழி மறித்து, தனது கையில் வைத்திருந்த கத்தியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அப்போது சுதாரித்துக் கொண்ட பெண் ஆசிரியை ரேகா, உடனடியாக அங்கிருந்து தப்பிக்க முயன்று உள்ளார். ஆனால் பள்ளி மாணவன், ஆசிரியையின் தலையில் மூன்று முறை வெட்டியதாக சொல்லப்படுகிறது.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, அந்தப் பள்ளி மாணவன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டான்.

இதனையடுத்து படுகாயமடைந்த பள்ளி ஆசிரியை விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் ரேகா, பள்ளி மாணவன் குறித்து தகவல் தெரியவில்லை என்றும், அவனின் அடையாளம், அவன் யாரென்றும் என்ற விவரம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் ரேகா அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அந்த மாணவன் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

viruthachalam school teacher attacked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->