"விட்டில் பூச்சி! அழிவை நோக்கிச் செல்கிறார் அண்ணாமலை" -ஜெயக்குமார் காட்டம்! - Seithipunal
Seithipunal


 அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  அ.தி.மு.க-வை ஒழிக்க யாராலும் முடியாது என்றும், கருணாநிதியின் முப்பாட்டனாலும் முடியவில்லை. அப்பாவாலும் முடியவில்லை என்று தெரிவித்த அவர், அண்ணாமலையின் அப்பாவாலும் முடியாது. அவரது அப்பாவின் முப்பாட்டனாலும் முடியாது என்று கூறினார்.

மேலும் அ.தி.மு.க.வை தொட்டுப் பார்த்தால் அவர்கள் நிச்சயம் கெட்டுப் போவார்கள் என்று சாடினார். எனவே ஏழேழு ஜென்மம் அண்ணாமலை எடுத்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. 52 ஆண்டு அனுபவம் பெற்ற ஆலமரம் போன்று இருக்கும் இயக்கத்தை,  3 வயது குழந்தை அண்ணாமலை அழிக்காமல் விட மாட்டேன் என்று பேசுவது விரக்தியின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளார்.

மின்மினி, விட்டில் பூச்சியை போலத் தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு மேனேஜர் மட்டுமே. அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? அண்ணாமலை 3 ஆண்டுகளாகத்தான் அரசியலில் உள்ளார்

தொடர்ந்து பேசிய அவர், பியூஸ் போன பல்பாகவே அண்ணாமலையை  மக்கள் பார்ப்பதாகவும், எனவே வாய் ஜாலம் சவால், உதார் எல்லாமே வெறும் பேச்சு தான்.  ஒரு எம்.எல்.ஏ. சீட் கூட பா.ஜ.கவினால் ஜெயிக்க முடியாது என்று  கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vitil insect Annamalai is heading for destruction Jayakumar Kattam


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->