மதுரையில் பரபரப்பு.! கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து மனைவி தற்கொலை.!
Wife committed suicide by drinking poison in front of her husband house in madurai
மதுரை மாவட்டத்தில் கணவர் வீட்டு முன்பு விஷம் குடித்து மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவரது மகள் பாண்டீஸ்வரி(21). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலம் என்ஜிஓ நகர் பகுதியை சேர்ந்த நவீன் பிரசாத்(21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பாண்டீஸ்வரியின் வீட்டார் திருமணத்திற்கு ஒப்பு கொண்டதால் அவர்களது வீட்டு மாடியில் பாண்டீஸ்வரியும், நவீன் பிரசாதம் தனிகுடுத்தனம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நவீன்பிரசாந்தின் பெற்றோர் வீட்டிற்கு வரும்படி அழைத்ததால் கடந்த சில நாட்களுக்கும் முன்பு நவீன்பிரசாத் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் மீண்டும் நவீன்பிரசாத் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டீஸ்வரி கணவர் வீட்டிற்கு சென்றபோது, நவீன்பிரசாத் பாண்டீஸ்வரி இடம் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளார். மேலும் திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் கொடுத்து நீதிமன்றம் முழு நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாண்டீஸ்வரி நேற்று மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது நவீன் பிரசாத் சென்னைக்கு வேலைக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கணவர் வீட்டு முன்பு பாண்டீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பாண்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Wife committed suicide by drinking poison in front of her husband house in madurai