கடலூர்: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் பெரிய கோவில் குப்பம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி அரசாயி (40). இவர் நேற்று மாலை வயல் வேளையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததால் அதனைப் பிடிப்பதற்காக அரசாயி சென்றுள்ளார்.

அப்பொழுது அரசாயி எதிர்பாராத விதமாக வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அரசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் உயிரிழந்த அரசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman killed by electrocution in Cuddalore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->