குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் பலி - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வால்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி கலையரசி (34). இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக மன வேதனை அடைந்த கலையரசி, தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கலையரசியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வீராணம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women suicide in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->