11 வயது பள்ளி மாணவி தொடர்ந்து பலாத்காரம்.! 53 வயது தொழிலாளி சிறையில் அடைப்பு - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது பள்ளி மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் சின்னவாளவாடி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மாரிமுத்து(53). இவர் வீட்டில் தனியாக இருந்த 11 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் மாரிமுத்து, மாணவியின் வீட்டுக்கு செல்வதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது மாணவி மாரிமுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், மாணவியை சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker arrested for sexually harassing a 11 year old school girl in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->