தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி.! ரயில் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் பெரியங்குப்பம் எம்.சி.ரோடு பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகன் தொழிலாளி கலையரசன் (54). இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் கலையரசன் விண்ணமங்கலம்-ஆம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, காட்பாடி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உயிரிழந்த கலையரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Worker killed in train collision


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->