நாமக்கல் : மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபர் கைது - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் மூதாட்டியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் அரியாகுழந்தை புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி நல்லம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் நித்தியராஜவேலன்(27) மூதாட்டியிடம் பணம் கேட்டு அவரை தாக்கியுள்ளார். மேலும் மூதாட்டிக்கு நித்தியராஜவேலன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து நித்தியராஜவேலன் தாக்கியதில் காயமடைந்த நல்லமாள்ளை மீட்டு அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டியை தாக்கி பாலியல் தொந்தரவு கொடுத்த நித்திய ராஜவேலனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth arrested for sexually harassing Oldwoman in namakkal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->