செயற்கை நுண்ணறிவு ChatGPT ஆண்ட்ராய்டு செயலி இந்தியாவில் அறிமுகம்! - Seithipunal
Seithipunal


நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தற்பொழுது ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு ChatGPT செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. iOS பயனாளர்களுக்காக தொடங்கப்பட்ட 2 மாதங்களுக்குப் பிறகு Android பயன்பாடுக்கு வருகிறது.

இந்த செயலி தற்பொழுது அமெரிக்கா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. OpenAI உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பயன்பாட்டைக் கிடைக்கச் செய்வதற்குப் பதிலாக படிப்படியாக இந்த செயலியை வெளியிட முடிவு செய்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் ஆண்ட்ராய்டு செயலியை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த OpenAI திட்டமிட்டுள்ளது. முன்னதாக iOS பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்ட இந்த செயலி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் ChatGPT செயலியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கடந்த நவம்பர் 2022ல் OpenAI நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ChatGPT செயலி மனிதனைப் போன்ற பதில்களை வழங்கும். அதன் அற்புதமான செயற்கை நுண்ணறிவு திறமையால் உலக மக்களை கவர்ந்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட 4 மாதங்களில் 100 மில்லியன் பயனர்களைப் பெற்ற வேகமான இணையப் பயன்பாடாக உருவாகியுள்ளது.

GPT-3.5 மற்றும் GPT-4 செயலி பயன்பாட்டிற்கு தற்போது இந்தியாவில் மாதச் சந்தாவாக ரூ.1,999 செலுத்த வேண்டும். ChatGPT பிளஸ் சந்தாதாரர்கள் மட்டுமே GPT-4 பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChatGPT Android App Launched in India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->