மழை பெய்ய வாய்ப்பு!!! தமிழகத்தில் 3 நாட்கள்.... - Seithipunal
Seithipunal


சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அதில்,"தமிழக மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. மேலும் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில், 32°-37° செல்சியஸ் வரையும், தமிழகக் கடலோர பகுதிகள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், 30°-35° செல்சியஸ் வரையும் வெயில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலைச் சற்று உயரும். அதாவது ,2°-3° செல்சியஸ் இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்.

மழை பெய்ய வாய்ப்பு:

இருப்பினும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25 ம் தேதி முதல் 28 ம் தேதி வரை மிதமான மழைப் பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். இதில் அதிகபட்ச வெப்பநிலை 33°செல்சியஸ் வரை இருக்கும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance of rain 3 days in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->