காலை வேளையில் லேசான பனிமூட்டம்: சென்னை மக்களுக்கு ஜில் அறிவிப்பு!
Tamilnadu weather report 28 jan 2024
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள வானிலை முன்னேறிவிப்பில்,
இன்று மற்றும் நாளை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
மார்ச் 30: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
மார்ச் 31: தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
ஏப்ரல் 1: தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
ஏப்ரல் 2 மற்றும் 3: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: இன்று மற்றும் நாளை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.
English Summary
Tamilnadu weather report 28 jan 2024