சிரியாவில் திடீரென இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டிடம்.! 11 பேர் பலி - Seithipunal
Seithipunal


சிரியாவில் திடீரென இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டிட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவின் வடக்கு நகரமான அலெப்போவின் தெற்குப் பகுதியின் ஃபர்டஸ் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐந்து மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 7 பெண்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்  எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த கட்டிடம் சட்டவிரோதமாக ஐந்து மாடி கட்டப்பட்டதாலும், பலவீனமான அடித்தளங்களை கொண்டுள்ளதும் இந்த விபத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

11 died in five storied building collapse in Syria


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->