நியூசிலாந்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு.! 3 பேர் பலி, ஒருவர் காணவில்லை.! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காணவில்லை என்று பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பெரிய நகராமான ஆக்லாந்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் ராணுவ விமானத்தில் ஆக்லாந்து சென்று அப்பகுதிகளை ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழையால் ஏற்பட்டு உள்ள உயிரிழப்பு அதன் பாதிப்பின் தீவிர தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார். மேலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பருவத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவரை காணவில்லை என்று தெரிவித்தார்.

இதில் வெள்ளம் சூழ்ந்த கால்வாய் ஒன்றில் ஒருவரின் சடலமும், வெள்ளம் சூழ்ந்த வாகன நிறுத்துமிடத்தில் மற்றொருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வானிலை குறித்து எச்சரிக்கையை தெரிவித்த பிரதமர், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறவும் வலியுறுத்தினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 killed one missing in flood due to heavy rain in newzealand


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->