ரஷ்யா : எரிவாயு கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் வெடி விபத்து - 5 பேர் பலி - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் எரிவாயு கசிவால் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தென்-மத்திய நகரமான நோவோசிபிர்ஸ்கில் உள்ள 5 அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 7:43 மணி அளவில் எரிவாயு கசிவால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து குடியிருப்பு முழுவதும் தீ பரவியது. இந்த விபத்தில் ஐந்து மாடி கட்டிடத்தின் இரண்டு நுழைவாயில்கள் இடிந்து விழுந்தது, 30 குடியிருப்புகள் தீயில் எரிந்து நாசமானது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த ஒன்பது பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் பிராந்திய கவர்னர் ஆண்ட்ரே டிராவ்னிகோவ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 dead in gas explosion in apartment building in Russia


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->