வேகமாக பரவி வரும் காய்ச்சல் தொற்று - ஊரடங்கை அமல்படுத்த சீனா திட்டம் - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக சீனாவின் ஜெஜியாங், ஜின்ஹுவா, ஹாங்சோ, நிங்போ மாகாணங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகமாக காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் காய்ச்சல் பரவுவதை தடுக்க ஊரடங்கை அமல்படுத்துவதாக சீன அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதில் சியான் மற்றும் ஷாங்சி நகரங்களில் காய்ச்சல் பரவுவதின் தீவிரம் அதிகரித்தால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜின்ஹுவா, ஹாங்சோ மற்றும் பெய்சென் பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் படங்களை கற்பிக்க தொடங்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China plans to implement lockdown due to fever spread in provinces


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->