தொடரும் அட்டூழியம் - அமெரிக்காவில் இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோவில் நேற்று ஐதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டார். இது குறித்து தகவலை அறிந்த, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி, தாக்கப்படுவதும், அதிக அளவில் ரத்தம் கொட்டியதையும் காண முடிந்தது. இருப்பினும், இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் மற்றொரு வீடியோவாக பரவி வருகிறது.

சிகாகோவில் இந்திய மாணவர் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம், அமெரிக்காவில் ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற இந்திய மாணவர் ஓகியோவின் சின்சினாட்டி நகரில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், தற்போது இந்திய மாணவர் ஒருவர் அமெரிக்காவில் தாக்கப்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian student injured for attack in america sikako


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->