இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை விடுவிப்பு...ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு!  - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் ராணுவ இளம் வீராங்கனை ஆகம் பெர்ஜர் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில்ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

ஓராண்டை கடந்து காசாவில் நடந்து வரும் மோதலில் பாலஸ்தீனியர்களில் 46,900 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும்  1 லட்சத்து 10 ஆயிரத்து 700 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில்,  எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக மத்தியஸ்தம் ஏற்படுத்தும் பேச்சுவார்த்தைக்கான பணியில் ஈடுபட்டன. இதையடுத்து , காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேல் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 19-ந்தேதி முதல் தொடங்கியது. இதனை தொடர்ந்து, பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  இதன்படி, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், 2-ம் கட்டத்தில் இஸ்ரேல் பணய கைதிகளில் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.

 போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இரு தரப்பிலும் கைதிகள் விடுவிக்கப்பட்டு வரும் சூழலில், பணய கைதிகளில் ஒருவரான இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஆகம் பெர்ஜர் (வயது 20) என்பவரை ஹமாஸ் அமைப்பினர் இன்று விடுவித்து உள்ளனர். இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக குண்டுகளால் சேதமடைந்த கட்டிடங்கள் மீது மக்கள் திரளாக நின்றபடியும், தெருக்களில் ஒன்று கூடியும் காணப்பட்டனர்.

பெர்ஜரை, அந்த கூட்டத்தினரின் முன் ஊர்வலம்போல் அழைத்து சென்று செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இஸ்ரேல் அரசும், பெர்ஜர் வந்து விட்டார் என பின்னர் உறுதி செய்துள்ளது. கடத்தப்பட்ட 5 இளம் இஸ்ரேல் வீராங்கனைகளில் பெர்ஜரும் ஒருவர். மற்ற 4 பேர் கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பணய கைதிகளில் 3 ஆண்கள் வருகிற சனிக்கிழமை விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli soldier freed Handed over to the Red Cross!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->