உக்ரைன் மீது பிப்ரவரி 24ல் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா திட்டம்.! - Seithipunal
Seithipunal


 

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஆன போர்க்கால இந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கி, தற்பொழுது 11 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில்,  உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக உக்ரைன் உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.

இதில் இம்மாதம் 24ஆம் தேதி இரண்டாம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், உக்ரைனின் கிழக்கு நகரமான லுஹான்ஸ்க்கில் ரஷ்யா தனது ராணுவ படைகளை அதிகரித்து வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உக்ரைனின் கிழக்கு மாகாணமான டோனெட்ஸ்க் பகுதியில் கிராம டோர்ஸ்கில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia plans to implement attacks on ukraine February 24


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->