60 வயது பெண்களை கூட விட்டுவைக்காத ரஷ்ய வீரர்கள்..பரிதாப நிலையில் உக்ரைன் பெண்கள்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது ரஷ்ய ராணுவ வீரர்கள் 60 வயது பெண்களை கூட பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடுவதாக பெண் எம்பிக்கள் தெரிவித்து வருகின்றனர்.

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் நாட்டில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் இன் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது குறித்து எதிர்கட்சி எம்.பி லிசியா வெசிலின்கோ, ரஷ்ய வீரர்கள் வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகின்றனர். இதனால் பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நிறைய பெண்கள் முதலில் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் பொழுது அவர்கள் ரஷ்ய வீரர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், நிறைய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பின் கொன்று விடுவதாகவும், பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர்களே அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், சிறுவர் சிறுமிகளை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களோ குடும்பத்தினரோ இது குறித்து வெளிப்படையாக பேச அவர்கள் முன்வரவில்லை என்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களுக்காக நாங்கள் சேகரிக்கும் உண்மைகள் இவை என்று மற்றொரு உக்ரைனிய எம்பி மரியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russian Army sexual Harrasment for Ukraine womens


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->