ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; பீதியில் திபெத் மக்கள்..!
Several earthquakes in one day in Tibet
இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்துள்ள திபெத்தில் கடந்த மாதம் 07-ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஷிகாட்சே நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட குறித்த நிலநடுக்கத்தால் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், திபெத்தில் இன்று காலை மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 11.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 28.53 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 87.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து மற்றுமொரு நிலநடுக்கம் 6.12 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட குறித்த நிலநடுக்கம், 28.80 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 86.55 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து இப்பகுதியில் நிலைதடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
Several earthquakes in one day in Tibet