அமெரிக்காவில் 14 பேரை சுட்டு கொலை செய்த கொடூரன் கைது.!   - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று, மர்ம நபர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

South

இது குறித்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து, தெற்கு கரோலினாவிலுள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொலம்பியா நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

South Carolina Gun Fire Case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->