சூடானில் இருதரப்பு மோதல் : 168 பேர் பலி, 98-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
Sudan attack
வட கிழக்கு ஆப்பிரிக்காவில், 2003-ம் ஆண்டு முதல் டர்பர் மாகாணத்தை மையமாகக்கொண்டு உள்நாட்டுப் போர் நடந்து வந்தது.
டர்பர் மாகாணத்திலுள்ள பெரும் பகுதிகளை வசம் கொண்டுள்ள சூடான் அரசுக்கு எதிராக போர் தொடுத்தது.
தர்பர் மாகாணத்தின் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் பழங்குடியினருக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பையும் சேர்ந்த தனி நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். 98-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சூடான் அரசு அந்த மாகாணத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகஉயர்மட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது.