பஹல்காம் சம்பவம்: கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம்; இலங்கை ஜனாதிபதி..! - Seithipunal
Seithipunal


பஹல்காம் பயங்கவரவாத சம்பவம் போல கடினமான ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் தொடர்பு உடையவர்களின் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டது. அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தீவிரவாத தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தியாவுக்கு ஆதரவாகவும் பல நாடுகளும் கருத்துகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கடினமான காலங்களில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமது சமூகவலை தள பதிவில் கூறியுள்ளதாவது; ''பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், நமது உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தேன்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கள் அஞ்சலி செலுத்துகின்றன. இந்தக் கடினமான காலங்களில் நாங்கள் இந்தியாவுடன் துணை நிற்போம்.''என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We will stand with India in difficult times Sri Lankan President


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->