அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு! போக்குவரத்துக்கு பாதிப்பு!
Arunachala Pradesh landslide
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலை பெறும் பகுதி அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளது.
இதனால் சீனாவின் எல்லையோர மாவட்டமான திவான் பள்ளத்தாக்கு சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேச மாநில அரசு, சேதமடைந்த சாலையை சீரமைக்க மூன்று நாட்களாகும் எனவும் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு காரணமாக சீன எல்லையை ஒட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Arunachala Pradesh landslide