நாட்டை உடைக்க முயற்சிக்கிறார் பிரதமர் - பரபரப்பு கிளப்பிய பரூக் அப்துல்லா.!
Farooq Abdullah says PM break country
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிமான பரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தேசத்தின் அனைத்து மக்களையும் பிரதமர் பாதுகாக்க வேண்டும்.
பிரதமர் ஒருபோதும் மக்களின் நிறம், மதம், உணவு அல்லது உடையால் வேறுபடுத்தக் கூடாது. ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடியோ நாட்டை உடைக்க முயற்சிக்கிறார்.
அவர் சமீபத்தில் ராஜஸ்தானில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தது எனக்கு அதிர்ச்சியையும் பெரும் ஏமாற்றத்தையும் அளித்தது என தெரிவித்துள்ளார்.
English Summary
Farooq Abdullah says PM break country