அடுத்தது கோடீஸ்வரர்களின் அரசா? 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி கேள்வி.!
Rahul Gandhi viral register
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக கடந்த 19ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 102 தொகுதிகள் வாக்கு பதிவு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் அடுத்து அமைய இருக்கும் அரசாங்கம் கோடீஸ்வரர்களில் ஆட்சியா? அல்லது 140 கோடி மக்களின் ஆட்சியா? என உங்களது வாக்கு தான் தீர்மானிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், என் அன்பார்ந்த நாட்டு மக்களே. நாட்டின் தலைவிதையை தீர்மானிக்க போகும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.
அடுத்த அரசாங்கம் சில கோடீஸ்வரர்கள் ஆட்சியா? அல்லது 140 கோடி மக்களின் ஆட்சியா? என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இன்று வீடுகளை விட்டு வெளியேறி அரசியல் அமைப்பு சட்டத்தின் சிறப்பாக மாறி ஜனநாயகத்தை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனாலும் வாக்களிக்க வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Rahul Gandhi viral register