நடிகா் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
actor vijay sethupathy case judgement july
நடிகா் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளா் ஜான்சன் ஆகியோருக்கு எதிராக மகா காந்தி என்பவா் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர், "கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதியை சந்தித்தேன். அப்போது, அவரைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தேன். எனது வாழ்த்தை ஏற்க மறுத்த அவா், பொது வெளியில் என் ஜாதியை பற்றி தவறாகப் பேசினாா்.
மேலும், நான் அவரைத் தாக்கியதாக ஊடகங்களில் அவதூறு பரப்பினாா். எனவே, நடிகா் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்". என்று கோரியிருந்தாா்.
இதனை அடுத்து, நடிகர் விஜய் சேதுபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
English Summary
actor vijay sethupathy case judgement july