நடிகை ராதிகாவிடம் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை! - Seithipunal
Seithipunal


ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் குழு, சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை மூலம் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல்  புகார்கள் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கேரவன்களில் ரகசிய கேமராக்கள் இருப்பதாக, கேரளாவில் ஒரு நடிகை இதுபற்றி தன்னிடம் தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார். 

இதையடுத்து  ராதிகா சரத்குமார், தானே நேரடியாக புலனாய்வு அதிகாரிகளை தொடர்பு கொண்டு செல்போன் மூலம் இந்த சம்பவம் எப்போது நடந்தது, எந்த நடிகை இது குறித்து என்னிடம் கூறினார்  என்பதை தெரிவித்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு புலனாய்வு அதிகாரிகள் எப்போது இந்த சம்பவம் நடைபெற்றது என்று கேள்வி எழுப்பியதோடு, இனி வரும் காலங்களில் கேரவன்களில் பாதுகாப்பை எப்படி உறுதிபடுத்துவது, ரகசிய கேமராக்கள் இருப்பதை எப்படி தடுப்பது என்பதை கேட்டறிந்தனர்.மேலும் தற்போதைய படப்பிடிப்பு தளங்களில் அதுபோல் தவறாக நடத்துகிறார்களா என்பதையும் விசாரிக்க உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில்  அனைத்து கேரவன்களிலும் சோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கேமராக்கள் இருந்தாலும், அதை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் இருப்பதாகவும், அதன் மூலம்  ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Radhika is being investigated by special investigation officers


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->