அதிக கூட்டத்திற்கு நடுவே.. திருப்பதி கோவிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.! - Seithipunal
Seithipunal


தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதன் பின்னர் சினிமா வீரன், வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த மார்ச்சில் 'ஓ சாத்தி சால்' என்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். 

இந்த படத்தை மீனு அரோரா தயாரித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் முசாஃபர் என்ற இசை ஆல்பத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கியிருந்தார். இத்தகைய நிலையில், ஒரு சூப்பர் அப்டேட் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வெளியாகி இருக்கிறது. 

தமிழில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இதனை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை பணிகளை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மேற்கொள்ளப் போவதாகவும், இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்ப உறுப்பினர்களுடன் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Aishwarya Rajinikanth In thirupathi Temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->