கட்டிய மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை... சென்னையில் தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


தேசிய விருது பெற்ற மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ராஜா கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜா கிருஷ்ணனின் மனைவி மஞ்சு அளித்த புகாரின் பேரில் சென்னை திருமங்கலம் காவல் நிலைய போலீசார் ராஜா கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சென்னையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஷைனி ஜோமன் என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராஜா கிருஷ்ணன் முன் ஜாமின் பெற்றுள்ள நிலையில், ஹோட்டல் உரிமையாளர் ஷைனி ஜோமனை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். 

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை ராஜா கிருஷ்ணனின் மனைவி மஞ்சுவின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவோம் என்று, ராஜா கிருஷ்ணன் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் ஷைனி ஜோமன் இருவரும் மிரட்டியதாக மஞ்சு புகார் அளித்திருந்தார்.

அதன் பெயரில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.


அண்மை செய்தி:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரம் வரை (இரவு 7 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police Case file Kerala Music Director Raja Krishnan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->