இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் "பொல்லாதவன்" படத்தின் மூலம் தடம் பதித்தவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம், விசாரணை, வடசென்னை உள்ளிட்ட பல படங்கள் வெளிவந்துள்ளன.

தற்போது இவர் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் விபத்தில் இறந்தது படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'வாடிவாசல்' படத்தையும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் பல்வேறு வெற்றிப் படங்களைக் எடுத்து வரும் வெற்றிமாறன், தற்போது மற்றொரு நாவலைத் திரைப்படமாக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, எழுத்தாளர் இமையம் எழுதி சாகித்ய அகாடமி விருது வென்ற 'செல்லாத பணம்' என்ற நாவலை  படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நாவலில் ஒரு திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் குடும்பம், சமூகம் போன்றவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கும். இதுவரை நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் இயக்கிய அனைத்துப் படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

மேலும், இப்போது இயக்கி வரும் 'விடுதலை' படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல்,  சூர்யா நடிக்கும் வாடிவாசலும் நாவலைத் தழுவிய கதை என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vetrimaran next movie sellatha panam naaval


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->